×

சென்னை விமான நிலையத்தில் ரூ65 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: பயணிகள் 2 பேர் கைது


மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து இன்று அதிகாலை 1.30 மணிக்கு பாங்காக் செல்லும் தாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதித்து அனுப்பினர். சென்னையை சேர்ந்த காஜா மொய்தீன் (32), கமுதியை சேர்ந்த அகமது இப்ராஹிம் (28) ஆகியோர் சுற்றுலா பயணிகளாக தாய்லாந்து நாட்டிற்கு செல்லவந்திருந்தனர். அவர்கள் இருவரையும் விசாரித்தபோது அவர்களது சூட்கேசுகளில் ரகசிய அறைகள்வைத்து கட்டு, கட்டாக அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் வைத்திருந்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.65 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து 2 பேரையும் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து காஜா மொய்தீன், அகமது இப்ராஹிம் ஆகியோரை கைது செய்தனர். இது ஹவாலா பணம் என்று தெரியவந்துள்ளது. இவர்களிடம் பணத்தை கொடுத்துவிட்ட, முக்கிய கடத்தல் புள்ளி யார் என்று விசாரிக்கின்றனர்.

The post சென்னை விமான நிலையத்தில் ரூ65 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: பயணிகள் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Meenambakkam ,Thai Airlines ,Bangkok ,Chennai ,Dinakaran ,
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்