×

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 11% அதிகமாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 11% அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.1 முதல் இன்று வரை இயல்பாக 420.5மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 465.5மி.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை 42 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.1 முதல் இன்று வரை இயல்பாக 766.4மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 1088.9மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 151% கூடுதலாக பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 103% கூடுதலாக பெய்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 81% கூடுதலாக பெய்துள்ளது.

 

The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 11% அதிகமாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Northeast ,Tamil Nadu ,Meteorological Department ,CHENNAI ,Monsoon ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 110 டிகிரி பாரன்ஹீட்...