×

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நாணல்காடு கிராம மக்கள் படகுகளில் பத்திரமாக மீட்பு..!!

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நாணல்காடு பகுதியில் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தாமிரபரணி ஆற்றிலிருந்து உபரி நீர் திறப்பால் 400 பேர் வெள்ள நீரில் சிக்கி தவித்தனர். 400 பேர் வெள்ள நீரில் சிக்கி தவித்து வருவதாக சன் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. சன் நியூஸ் செய்தி எதிரொலியாக நாணல்காடு பகுதியில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. துணை ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தமிழ்நாடு மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நாணல்காடு கிராம மக்கள் படகுகளில் பத்திரமாக மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Nanalkadu ,Srivaikundam ,Thoothukudi ,Tamirabarani river ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...