சென்னை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழைபொழிவை ஏற்படுத்திய வளிமண்டல சுழற்சி விலகியது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல அடுக்கில் உருவான சுழற்சி விலகியது. வளிமண்டல சுழற்சி விலகியதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை படிப்படியாக குறைந்துள்ளது. நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழைபொழிவை ஏற்படுத்திய வளிமண்டல சுழற்சி விலகியது..!! appeared first on Dinakaran.