×

பக்தர்கள் கோரிக்கை செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

செம்பனார்கோயில், டிச.18: செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே ஆக்கூரில் பழமை வாய்ந்த சீதளாதேவி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள சீதளாதேவி அம்மனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பதும், குழந்தை பாக்கியம் உள்பட பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுவதாகவும் ஐதீகம். இதனால் இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபடுகின்றனர். பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சீதளாதேவி மாரியம்மனுக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், மஞ்சள் தூள் மற்றும் பல்வேறு வாசன திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் சாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post பக்தர்கள் கோரிக்கை செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Akur Sitaladevi Mariamman temple ,Sembanar temple ,Sembanarkoil ,
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை