×

ஓசூர் சப்-கலெக்டராக பிரியங்கா பொறுப்பேற்பு

ஓசூர், டிச.19: ஓசூர் சப்கலெக்டராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சரண்யா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, டில்லியில் உயர் கல்வித்துறை உதவி செயலராக இருந்த பிரியங்கா, ஓசூர் சப்கலெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு வருவாய்த்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரியங்கா 2020 -2021ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றார். திண்டுக்கல் சப்கலெக்டராக(பயிற்சி) முதலில் நியமிக்கப்பட்டார். கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பட்டதாரியான இவரது தந்தை அண்ணாதுரை சென்னை துறைமுகத்தில் பணியாற்றி வருகிறார். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளை பேசக்கூடியவர். நிருபர்களிடம் பிரியங்கா கூறுகையில், ‘அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்று சேர நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதியை ஒட்டிய மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். ஓசூரின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்ற பாடுபடுவேன்,’ என்றார்.

The post ஓசூர் சப்-கலெக்டராக பிரியங்கா பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Priyanka ,IAS ,Saranya ,Delhi ,Dinakaran ,
× RELATED ராஜீவ் காந்தி குறித்த விமர்சன...