×

பனகல் கட்டிடம் அருகே வாலிபர் தவறவிட்ட லேப்டாப்பை மீட்டு ஒப்படைப்பு

 

தஞ்சாவூர், டிச.19: தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே வாலிபர் தவறவிட்ட லேப்டாப்பை மீட்டு ஒப்படைத்த தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதா மற்றும் கண்டெடுத்த ஆட்டோ ஓட்டுனரை பொதுமக்கள் பாராட்டினர். தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே நேற்றுமுன்தினம் இரவு இபி காலனி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவர் வைத்திருந்த லேப்டாப்பை தவற விட்டார். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுனர் சிவா கீழே கிடந்த லேப்டாப்பை மீட்டு தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதாவிடம் ஒப்படைத்துள்ளார்.

இதுகுறித்து நேற்று காலை மணிகண்டன் கிழக்கு காவல் நிலையத்தில் தனது லேப்டாப்பை காணவில்லை, அதனை மீட்டு தருமாறு புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின்பேரில் காவல்ஆய்வாளர் சுதா இந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்து பின்பு அந்த லேப்டாப்பை தவறவிட்ட மணிகண்டனிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் மணிகண்டன் தவறவிட்ட லேப்டாப்பை எடுத்துச் சென்று காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் சிவாவையும், அதனை உரியவரிடம் ஒப்படைத்த இன்ஸ்பெக்டர் சுதாவையும் பொதுமக்கள் பாராட்டினர்.

The post பனகல் கட்டிடம் அருகே வாலிபர் தவறவிட்ட லேப்டாப்பை மீட்டு ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Panagal ,Thanjavur ,Thanjavur East Police ,Panakal ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...