×

மணிமங்கலம் பகுதியில் பழங்குடியின மக்களுக்கு நிவாரண பொருட்கள்: போலீசார் வழங்கினர்

தாம்பரம்: மணிமங்கலம் பகுதியில் பழங்குடியின மக்களுக்கு போலீசார் நிவாரண பொருட்களை வழங்கினர். தாம்பரம் அடுத்த மணிமங்கலம் காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட செர்பணஞ்சேரி பகுதியில் 100க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக செர்பணஞ்சேரி பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் அனைவரும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனையடுத்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், மணிமங்கலம் உதவி ஆணையர் ரவி மற்றும் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் அசோகன் ஆகியோர் அப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு போன்ற நிவாரண பொருட்களை நேரில் சென்று வழங்கினர்.

The post மணிமங்கலம் பகுதியில் பழங்குடியின மக்களுக்கு நிவாரண பொருட்கள்: போலீசார் வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : Manimangalam ,Tambaram ,Dinakaran ,
× RELATED கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50...