×

16வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை போக்சோ சட்டத்தில் ஏசி மெக்கானிக் கைது: கீழ்பென்னாத்தூர் அருகே

திருவண்ணாமலை, டிச.19: சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கீழ்பென்னத்தூர் அடுத்த ரெட்டியார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் சந்தோஷ் (24). ஏசி மெக்கானிக். இவர், கீழ்பென்னத்தூர் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் 16 வயது சிறுமியை காதலிப்பதாக நடித்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், இதுகுறித்து குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிகிறது. எனவே, பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். பின்னர் இச்சம்பவம், சிறுமியின் தாய் நேற்று திருவண்ணாமலை மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சிறுமியை கொலை மிரட்டல் விடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து, வாலிபர் சந்தோஷை போக்சோ சட்டப்பிரிவின் கீழ் நேற்று கைது செய்தனர்.
பின்னர், மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post 16வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை போக்சோ சட்டத்தில் ஏசி மெக்கானிக் கைது: கீழ்பென்னாத்தூர் அருகே appeared first on Dinakaran.

Tags : Kilibennathur ,Thiruvannamalai ,Kilipennathur ,
× RELATED விவசாய பாசனத்திற்கு தண்ணீரின்றி...