×

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் ராகுல்நாத் பங்கேற்பு

செங்கல்பட்டு: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தலைமையில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தலைமையில் நேற்று‌ மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 278 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த குறை தீர்வு நாள் கூட்டத்தில், சிறுபான்மையினர் தினத்தை முன்னிட்டு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் மூலம் அச்சிறுப்பாக்கம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் வாயிலாக 3 நபர்களுக்கு தலா ரூ.47,500 வீதம் தொழில் தொடங்குவதற்கான கடன் தொகை ரூ.1,42,500னை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார். இந்த குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயணசர்மா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடைநம்பி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) லலிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), சாகிதா பர்வின், உதவி கலெக்டர் (பயிற்சி) ஆனந்த் குமார் சிங், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரவணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வெற்றிகுமார், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் ராகுல்நாத் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : People's Grievance Day Meeting ,Collector ,Rahul Nath ,Chengalpattu ,People's Grievance Day ,District Collector ,Office ,Rahulnath ,Dinakaran ,
× RELATED குழந்தை திருமணங்களை தடுக்க ஆய்வு கூட்டம்