×

சேவல் சூதாட்டம் 4 பேர்கைது வாகனம் பறிமுதல்

ஈரோடு, டிச.19: அந்தியூர் அடுத்துள்ள ஒட்டப்பாளையத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் சேவல் சூதாட்டம் நடப்பதாக அந்தியூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சோதனை நடத்திய போது, சூதாட்டத்தில் ஈடுபட்ட வெள்ளோடு பாலாஜிகார்டன் சின்னசாமி மகன் கிரன் (23), குப்பிச்சிபாளையம் நாராயணசாமி மகன் ஜெயபிரகாஷ்(25), ஒட்டப்பாளையம் ராமகிருஷ்ணன் (34), வேம்பத்தி கிழக்கு வீதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மாரிமுத்து(27) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 2 சேவல்கள் மற்றும் ஒரு பைக், ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

The post சேவல் சூதாட்டம் 4 பேர்கைது வாகனம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Erode ,Andhiur ,Ottapalayam ,Andhiyur ,
× RELATED ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே...