×

பார்வையற்ற ஐஏஎஸ் அதிகாரி சப்-கலெக்டராக பொறுப்பேற்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட சப்-கலெக்டராக ஐஏஎஸ் அதிகாரியான கோகுல் (27), தமிழ்நாடு அரசால் கடந்த சில தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். ஒன்றிய அரசின், பெருவணிக விவகார அமைச்சக உதவி செயலாளராக டெல்லியில் பணிபுரிந்த இவர், நேற்று பெரம்பலூர் சப் கலெக்டராக பொறுப்பேற்றார்.
இதையொட்டி அவர் கலெக்டர் கற்பகத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

எஸ்பி ஷ்யாம்ளாதேவி, டிஆர்ஓ வடிவேல் பிரபு, திட்ட இயக்குநர் லலிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மஞ்சுளா உள்ளிட்டோர் புதிய சப் கலெக்டர் கோகுலுக்கு வாழ்த்து தெரிவித்தனர். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த கோகுல், பிறவியிலேயே பார்வை குறைபாடு உடையவர். ஆங்கில இலக்கியத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். 2021 பேட்ஜ் அதிகாரியான கோகுல், நெல்லையில் பயிற்சி கலெக்டராக பணியை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

The post பார்வையற்ற ஐஏஎஸ் அதிகாரி சப்-கலெக்டராக பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Gokul ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...