- OPS
- அஇஅதிமுக
- கடம்பத்தூர் யூனியன்
- திருவள்ளூர்
- திருவள்ளூர்
- கடம்பத்தூர் ஒன்றியம்
- ரமேஷ்
- தாய் சபை செயலாளர்
- சுரேஷ்
- தின மலர்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றிய ஓபிஎஸ் அணி செயலாளர் ரமேஷ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சுரேஷ் ஏற்பாட்டில் ஓபிஎஸ் அணியினர் கூண்டோடு விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி திருவள்ளூரில் உள்ள மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா, முன்னாள் எம்பி பி.வேணுகோபால், கடம்பத்தூர் ஒன்றிய செலாளர் சூரகாபுரம் சுதாகர் முன்னிலையில் 100க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்தி பேசினார். இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட அவைத் தலைவர் நிர்வாகிகள் இன்பநாதன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர், ஒன்றிய அவைத்தலைவர் சிற்றம் சீனிவாசன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஞானகுமார், அம்மாபேரவை மாவட்ட துணை செயலாளர் எழிலரசன், பாலாஜி, நகர மன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
The post கடம்பத்தூர் ஒன்றியத்தில் கூண்டோடு விலகி அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் appeared first on Dinakaran.