×

தென் மாவட்டங்களில் கடலோர காவல்படை மீட்பு பணி

சென்னை: நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மீட்பு பணிகளில் இந்திய கடலோர காவல்படை தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல்படையிலிருந்து ஆறு பேரிடர் மீட்புக் குழுக்கள் (டிஆர்டி) மாவட்ட நிர்வாகங்களின் ஒருங்கிணைப்புடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஹெலிகாப்டருடன் இந்திய கடலோரக் காவல்படையின் கடல் ரோந்து கப்பல் அனுப்பப்பட்டுள்ளது. மதுரையில் டோர்னியர் விமானம் மற்றும் ஏஎல்எச் ஹெலிகாப்டரை நிலைநிறுத்தியுள்ளது. துடுப்பு படகுகள், விசைப்படகுகள், கடலோர காவல் நிலைய மண்டபத்தில் இருந்து ஒரு மீட்பு மூழ்காளர் குழு மற்றும் ஒரு பேரிடர் மீட்புக் குழு ஆகியவை தூத்துக்குடிக்கு மீட்புப் பணிகளில் உதவுவதற்காக அனுப்பப்பட்டுள்ளன.

The post தென் மாவட்டங்களில் கடலோர காவல்படை மீட்பு பணி appeared first on Dinakaran.

Tags : Coast Guard Rescue Mission ,Southern Districts ,Chennai ,Indian Coast Guard ,Nellai ,Thoothukudi ,Tuticorin ,Coast Guard Rescue Mission in Southern ,Districts ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...