- Vikramaraja
- சென்னை
- மாநில தலைவர்
- தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு
- ஏம் விக்கிரமராஜன்
- Wickramaraja
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று வெளியிட்ட அறிக்கை: கனமழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கொடையுள்ளம் கொண்ட வணிக பெருமக்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் ஆதரவுக்கரங்களை நீட்டி, நிவாரணப் பணிகளுக்கான அத்தியாவசிய பயன்பாட்டு பொருட்களை வழங்க முன்வரவேண்டும். அந்தந்த பகுதி பேரமைப்பு நிர்வாகிகள் வணிக பெருமக்களோடு இணைந்து அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் நிவாரணப் பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
சிறு, குறு வணிகர்கள் பெருவெள்ள பாதிப்பிலிருந்து மீண்டு, தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அரசு துணைநின்று உதவ வேண்டும். மிகப்பெரும் இக்கட்டான சோதனையான சூழலில் மக்கள் பயன்பாட்டுப்பொருட்கள் தட்டுப்பாடின்றி பொதுமக்களை சென்றடையும் வகையில் சேவையாற்ற வணிகர்கள் தங்களின் சேவை சார்ந்த ஒத்துழைப்பை பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post கனமழையால் மக்கள் பாதிப்பு; வணிகர்கள் சேவையாற்ற விக்கிரமராஜா வேண்டுகோள் appeared first on Dinakaran.