×

வேறு சமூக இளைஞரை காதலித்ததால் சகோதரியை கொன்று ஆற்றில் வீசிய சகோதரர்கள்: கவுரவ கொலை குறித்து விசாரணை


காஜியாபாத்: உத்தர பிரதேசத்தில் வேறு சமூக இளைஞரை காதலித்ததால் தங்களது சகோதரியை கொன்று ஆற்றில் வீசிய சகோதரர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், மற்றொரு சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்தார். இதையறிந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அந்த இளம்பெண்ணின் சகோதரர்கள் சுபியான், மஹ்தாப் ஆகிய இருவரும், தங்களது சகோதரியை கொன்று கங்கை ஆற்றின் கால்வாயில் உடலை வீசி எறிந்துவிட்டு வீடு திரும்பினர். அவர்களின் செய்கையில் சந்தேகமடைந்த ரோந்து போலீசார், சகோதரர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே, கங்கை கால்வாயில் சடலத்தை தேடும் பணியில் என்டிஆர்எப் குழுவினர் மும்முரமாக ஈடுபட்டனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘முராத்நகர் கங்கை கால்வாய் வழியாக ரோந்து சென்றபோது, ​சந்தேகத்திற்கிடமான நிலையில் இரண்டு இளைஞர்களைக் கண்டோம். அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தியபோது, ​அவர்கள் தங்களது சகோதரியை கொன்று அவரது உடலை அப்புறப்படுத்த சடலத்தை தூக்கி வந்தனர். கால்வாயில் வீசிவிட்டு திரும்பிய போது எங்களிடம் சிக்கிக் கொண்டனர். விசாரணையில், தங்களது சகோதரி வேறொரு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததாகவும், அதனால் சகோதரியை கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர். அதையடுத்து சுபியான், மஹ்தாப் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளோம். தற்போது அந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. இந்த கவுரவக் கொலை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது’ என்றனர்.

The post வேறு சமூக இளைஞரை காதலித்ததால் சகோதரியை கொன்று ஆற்றில் வீசிய சகோதரர்கள்: கவுரவ கொலை குறித்து விசாரணை appeared first on Dinakaran.

Tags : Ghaziabad ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED ஊழல் சாம்பியன் பிரதமர் மோடி பாஜ 150 சீட்களை தாண்டாது: ராகுல் காந்தி சவால்