×

டெல்லி மெட்ரோ ரயிலில் புடவை சிக்கியதால் பெண் பலி


புதுடெல்லி: டெல்லி மெட்ரோ ரயிலின் கதவில் பெண்ணின் புடவை சிக்கியதால், காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தார். டெல்லி மெட்ரோ ரயிலானது, இந்தர்லோக் ரயில் நிலையத்தில் நின்ற போது 35 வயதுடைய ரீனா என்ற பெண், கடந்த 14ம் தேதி ரயிலில் இருந்து இறங்கியபோது அவரது புடவை ரயில் பெட்டியின் கதவில் சிக்கிக் கொண்டது. அப்போது ரயில் புறப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக அந்தப் பெண் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இதுகுறித்து டெல்லி மெட்ரோவின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி அனுஜ் தயாள் கூறுகையில், ‘இந்தர்லோக் மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண் பயணியின் ஆடை ரயிலில் சிக்கியது. அவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததார். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்’ என்றார்.

The post டெல்லி மெட்ரோ ரயிலில் புடவை சிக்கியதால் பெண் பலி appeared first on Dinakaran.

Tags : saree ,Delhi ,New Delhi ,sari ,Delhi Metro ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...