×

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பிய 31 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

டெல்லி: நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பிய 31 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், திமுக எம்.பி.க்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தமிழச்சி தங்கபாண்டியன், சி.என்.அண்ணாதுரை, செல்வம் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திருநாவுகரசர் உள்ளிட்டோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் மக்களவையில் கனிமொழி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட 13 எம்.பி.க்களும் மாநிலங்களவையில் டெரிக் ஓ பிரையனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உள்ளிட்ட 31 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

The post நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பிய 31 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Parliament ,Delhi ,DR ,Balu ,A. Raza ,Dayanidhi ,Dinakaran ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...