×

குவைத் மன்னர் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தலைமைச்செயலகத்தில் அரைக்கம்பத்தில் பறந்த தேசியக்கொடி

சென்னை: குவைத் மன்னர் ஷேக் நவாஃப் அல்அஹ்மத் அல்சபா மறைவையொட்டி தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் அரைக்கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டது. இந்தியாவின் நட்பு நாடுகளில் ஒன்று குவைத். இந்நாட்டின் மன்னராக கடந்த மூன்று ஆண்டுகளாக ஷேக் நவாஃப் அல்அஹ்மத் அல்சபா ஆட்சி செய்தார்.

கடந்த சில மாதங்களாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 16ம் தேதி காலமானார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், குவைத் மன்னர் ஷேக் நவாஃப் அல்அஹ்மத் அல்சபா மறைவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒன்றிய அரசு உத்தரவின் பேரில் சென்னை தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. அதேபோல், நேற்றைய தினம் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

The post குவைத் மன்னர் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தலைமைச்செயலகத்தில் அரைக்கம்பத்தில் பறந்த தேசியக்கொடி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,King of Kuwait ,Sheikh Nawaf al-Ahmad Alzaba ,India ,Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...