×

மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவோம்: ம.பி. காங்கிரஸ் புதிய தலைவர் நம்பிக்கை

இந்தூர்: கூட்டு தலைமையின் கீழ் மக்களவை தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவோம் என ம.பி. காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜித்து பட்வாரி தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்ட பேரவை தேர்தலில் 163 இடங்களில் வெற்றி பெற்று பாஜ ஆட்சி அமைத்துள்ளது. 66 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் தோல்வியடைந்தது. தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியை அடுத்து கட்சியின் மாநில தலைவராக இருந்த கமல்நாத் ராஜினாமா செய்தார். இதையடுத்து கட்சியின் புதிய தலைவராக முன்னாள் அமைச்சர் ஜித்து பட்வாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜித்து பட்வாரி நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ சிறிய தொண்டனான எனக்கு மிக பெரிய பொறுப்பை கட்சி மேலிடம் அளித்துள்ளது. பேரவை தேர்தலில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது. எனவே வரும் மக்களவை தேர்தலில் மிக பெரிய சவால்கள் எனக்கு முன் உள்ளன என்பது தெரியும். எனவே, இந்த சவாலை சமாளிப்பதற்கு, கூட்டு தலைமையின் கீழ் தேர்தலை சந்தித்து கட்சிக்கு கட்சிக்கு சிறப்பான வெற்றியை தேடி தருவோம் என உறுதி கூறுகிறேன்’’ என்றார்.

The post மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவோம்: ம.பி. காங்கிரஸ் புதிய தலைவர் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Congress ,Jithu ,President ,M.P. Hope ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...