×

சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதலில் எஸ்ஐ பலி

ராய்பூர்: சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் சிஆர்பிஎப் எஸ்.ஐ உயிரிழந்தார். சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டம் ஜகர்குண்டா பகுதியில் நக்சல்கள் நடமாடுவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் பாதுகாப்பு படையின் சிஆர்பிஎப் எஸ்.ஐ பலியானார். ஒரு காவலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை சுற்றி வளைத்து பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

* நக்சல்களை ஒழிக்க முதல்வர் உத்தரவு
சட்டீஸ்கரில் விஷ்ணு தேவ் சாய் தலைமையில் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நக்சல் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை உயரதிகாரிகளின் உயர்மட்ட கூட்டம் முதல்வர் சாய் தலைமையில் நடைபெற்றது. அப்போது உயிரிழந்தவருக்கு முதல்வர் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து மாநிலத்தில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஒன்றிய அரசின் உதவியுடன் நக்சலிசம் அழிக்கப்படும் என்று முதல்வர் விஷ்ணு தேவ் சாய் கூறினார்.

The post சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதலில் எஸ்ஐ பலி appeared first on Dinakaran.

Tags : SI ,Naxal attack ,Chhattisgarh Raipur ,CRPF ,Naxals ,Chhattisgarh ,Sukma district ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...