×

நிதி ஒதுக்கீடு செய்வதில் ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு: பாஜ மீது வைகோ கடும் தாக்கு

அவனியாபுரம்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியில் திமுக தான் முக்கிய பங்கு வகிக்க போகிறது. புதிய பாராளுமன்ற கட்டிடம் 5 நட்சத்திர விடுதியைப் போல உள்ளது. வெடிகுண்டு வீசி இருந்தால் எவ்வளவு பெரிய விபரீதம் நடந்திருக்கும். இதை கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரை கூட்டம் முழுவதும் பங்கேற்க விடாமல் சஸ்பெண்ட் செய்து இருக்கிறார்கள். அதேபோல மக்களவையிலும் 14 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஜனநாயக படுகொலை செய்வதிலேயே பாஜகவினர் கவனமாக உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வெள்ள நிவாரணத்திற்காக தமிழ்நாடு அரசு கேட்டதில் ஐந்தில் ஒரு பங்கைத் தான் ஒன்றிய அரசு கொடுத்துள்ளது. ஆனாலும், இதை வைத்துக்கொண்டு இவ்வளவு சிறப்பான பணியை திமுகவினர் செய்துள்ளனர்.  கொடுக்க வேண்டிய தொகையை ஒன்றிய அரசு கொடுத்தாக வேண்டும். அவர்கள் ஒரு கண்ணிலே சுண்ணாம்பு, ஒரு கண்ணில் வெண்ணெய் என்பது போல பாஜ ஆளுகிற மாநிலத்தில் ஒரு நிதியும், எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் குறைவான தொகையும் கொடுத்துள்ளார்கள். இது அநீதி, அக்கிரமம். இவ்வாறு தெரிவித்தார்.

The post நிதி ஒதுக்கீடு செய்வதில் ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு: பாஜ மீது வைகோ கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Vaiko ,Baja Avaniyapuram ,DMK ,general secretary ,Madurai ,India ,
× RELATED 31வது ஆண்டு விழா திமுகவுக்கு என்றும்...