×

ஆளுநருக்கு குட்டு வாங்குவதே வேலை: கே.எஸ்.அழகிரி

நெல்லை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் விவகாரத்தில் அவர்கள் யார், எதற்காக வந்தார்கள், எப்படி உள்ளே நுழைந்தார்கள்? என்பது குறித்து எந்த உண்மையையும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் இதுவரை தெரிவிக்கவில்லை. இதுகுறித்து விளக்கம் அளிக்க பிரதமர் மோடி அச்சப்படுகிறார். 4 மாநில தேர்தல் முடிவுகளில் காங்கிரசின் வாக்குவிகிதம் உயர்ந்துள்ளதை உணர முடிகிறது.

2004ம் ஆண்டு இதேபோன்று மாநிலங்களில் நடந்த தேர்தலில் பாஜ வெற்றி பெற்றது. ஆனால் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. வெற்றி தோல்விக்கு பின்னர் ஆயிரம் காரணங்கள் கூறப்படும். தமிழக ஆளுநர் ஒவ்வொரு முறையும் யாரிடமாவது குட்டு வாங்கிக் கொண்டே இருக்கிறார். பேசுவது சரிதானா? என்பதை ஆராய்ந்து பேச வேண்டும். சுப்ரீம் கோர்ட் அவரை கடுமையாக கண்டித்துள்ளது. இத்தகைய கண்டனத்திற்கெல்லாம் அவர், நிலைமையை உணர்ந்து ராஜினாமா செய்திருக்க வேண்டும். இந்தியா கூட்டணிக்கு நிச்சயம் மெஜாரிட்டி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆளுநருக்கு குட்டு வாங்குவதே வேலை: கே.எஸ்.அழகிரி appeared first on Dinakaran.

Tags : Governor ,KS Alagiri ,Nellai ,Tamil ,Nadu ,Congress ,President ,KS Azhagiri ,Nellai Vannarpet ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...