×

போக்குவரத்து பணியில் ஈடுபட்ட பெண் ஏட்டுவை ஆபாசமாக பேசி மிரட்டிய ஆட்டோ டிரைவர் கைது

பெரம்பூர்: சென்னை செம்பியம் போக்குவரத்து ஏட்டு தேவி (45). இவர் நேற்றுமுன்தினம் மாலை 6 மணி அளவில் பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள மாதவரம் நெடுஞ்சாலை பகுதியில் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் குடிபோதையில் நடந்துவந்த பெரம்பூர் கொல்லம் தோட்டம் தெருவை சேர்ந்த ஷ்யாம் (22) என்பவர் திடீரென ஏட்டு தேவியிடம் சென்று வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் அவர், ‘’ஏன் ஆட்டோக்களை மறித்து ஒரு வழிப்பாதையாக மாற்றுகிறீர்கள், எங்களுக்கு சங்கடமாக உள்ளது’’ என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.

அதற்கு ஏட்டு,’’போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளதால் ரயில் நிலையத்துக்கு வருபவர்கள் சிரமப்படுகிறார்கள். இதனால்தான் போக்குவரத்து விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கூறி வருகிறோம்’’ என்றார். இதன்பிறகும் ஷ்யாம் வாக்குவாதம் செய்ததால் ஏட்டு தனது செல்போனில் வீடியோ எடுக்க முயன்றுள்ளார். இதனால் அவர், பெண் ஏட்டுவை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் அவர் கையில் இருந்த செல்போனை தட்டிவிட்டுள்ளார். இதுகுறித்து ஏட்டு கொடுத்த தகவல்படி, செம்பியம் சட்டம், ஒழுங்கு போலீசார் வந்த ஷ்யாமை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பெரம்பூரில் இருந்து மூலக்கடைவரை ஆட்டோ ஓட்டி வருகின்றார் என்பது தெரிந்தது. இதையடுத்து ஷ்யாமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post போக்குவரத்து பணியில் ஈடுபட்ட பெண் ஏட்டுவை ஆபாசமாக பேசி மிரட்டிய ஆட்டோ டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Ettu ,Perambur ,Chennai ,Sempiyam ,Ettu Devi ,
× RELATED சென்னை வில்லிவாக்கத்தில் போதை மாத்திரைகளை கடத்தி வந்தவர் கைது!!