×

பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 17,000 கனஅடி நீர் திறப்பு

நெல்லை: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கபட்டுள்ளது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து விநாடிக்கு 17,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் தற்போது 134 அடியாக அதிகரித்துள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் தற்போது 96 அடியை எட்டியுள்ளது.

The post பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 17,000 கனஅடி நீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Babanasam ,Chervalar ,Nellai ,Papanasam ,Chervalaru ,Papanasam, ,Chervalar dams ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை...