×

திருவாரூரில் அரசு வேலை வாங்கி தருவதாக ₹2.65 லட்சம் மோசடி செய்த புகாரில், பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அரசு வேலை வாங்கி தருவதாக ₹2.65 லட்சம் மோசடி செய்த புகாரில், பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேந்திரன் (56) என்பவர் கைது செய்யபட்டுள்ளார். இடும்பாவனம் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவரின் மகனுக்கு வி.ஏ.ஓ. வேலை வாங்கித் தருவதாக பல கட்டங்களாக ₹2.65 லட்சம் பணம் வாங்கியுள்ளார் ராஜேந்திரன். பணத்தை திருப்பி தராததால் சாந்தி போலீசில் புகாரளித்தார். விசாரணையில் ஆனந்தவல்லி என்பவரிடமும் இதேபோல பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

The post திருவாரூரில் அரசு வேலை வாங்கி தருவதாக ₹2.65 லட்சம் மோசடி செய்த புகாரில், பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் கைது appeared first on Dinakaran.

Tags : BJP district ,general secretary ,Thiruvarur ,Muthuppetta ,Thiruvarur district ,Thiruvaroor ,
× RELATED வெயில் தணித்த நல்ல மழை...