×

மழை நிவாரண நிதிக்கு 4 மாத மதிப்பூதியம்

கீழ்வேளூர்,டிச.17: சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் தொழில் அதிபர்கள், அரசியல் கட்சியினர், எம்.பி., எம்எல்ஏக்கள், என ஏராளமானவர்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி மன்ற 3வது வார்டு உறுப்பினர் மகேஸ்வரன் (தி.மு.க.). முதல்வர் நிவாரண நிதிக்கு பேரூராட்சி மன்ற உறுப்பினருக்கு மதிப்பூதியமாக வழங்கப்படும் மாதம் ரூ.2,500ஐ 4 மாதத்திற்கான மதிப்பூதிம் ரூ.10,000த்தை, பேரூராட்சி செயல் அலுவலர் குகண் முன்னிலையில் கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ்சிடம் வழங்கினார்.

The post மழை நிவாரண நிதிக்கு 4 மாத மதிப்பூதியம் appeared first on Dinakaran.

Tags : Kilvellur ,Cyclone Mikjam ,Chennai ,
× RELATED மிக்ஜாம் புயலில் சேதம் 8 புதிய வீடுகள்...