×

சேவல்களை வைத்து சூதாடியவர் கைது

மேட்டூர், டிச.17: நங்கவள்ளி அருகே வேட்டிக்காட்டில் பகுதியில் சேவல்களை சண்டைக்கு விட்டு சூதாட்டம் நடைபெறுவதாக நங்கவள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் எஸ்ஐ மாதையன், அங்கு சென்ற போது கோழி, சேவல்களை வைத்து சூதாடி கொண்டிருந்தவர்கள் தப்பி ஓடினார்கள். விரட்டி சென்றதில், ரெட்டிகாட்டைச் சேர்ந்த செல்லதுரை(28) என்பவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியவர்களை தேடி வருகிறார்கள்.

The post சேவல்களை வைத்து சூதாடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Mettur ,Nangavalli ,Vedtikattil ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அருகே பரிதாபம்: மரத்தில் கார் மோதியதில் மகன், பெண் அதிகாரி பலி