×

திங்கள்சந்தை அருகே குடும்ப தகராறில் விபரீதம்: தாயை தாக்கி சுவரில் மோதிய மகன்

திங்கள்சந்தை, டிச. 17: குமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே உள்ள ஆலன்விளையைச் சேர்ந்தவர் அலெக்ஸாண்டர். இவரது மனைவி தாய் (65). இந்த தம்பதியின் மகன் செல்வன் (37). தொழிலாளி. செல்வனுக்கு திருமணமாகி மனைவி உள்ளார். அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக செல்வன் தனது தாயார் தாயிடம் அடிக்கடி தகராறு செய்வதும்,அக்கம் பக்கத்தினர் விலக்கி விடுவதும் நடந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் தாய் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செல்வன் எனது மனைவியின் மிக்சியை ஏன் உடைத்தாய் எனக் கூறி அவரை சரமாரி தாக்கியதாக தெரிகிறது.

தாயின் இடது கையை திருகிய செல்வன், அவரை சுவரில் மோதியுள்ளார். இதில் தோள்பட்டையில் பலத்த காயமடைந்த தாய் குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட தாய்க்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சம்பவம் குறித்து தாய் கொடுத்த புகாரின் பேரில் செல்வன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

The post திங்கள்சந்தை அருகே குடும்ப தகராறில் விபரீதம்: தாயை தாக்கி சுவரில் மோதிய மகன் appeared first on Dinakaran.

Tags : Alexander ,Alanjay ,Kurundankot, Kumari district ,
× RELATED ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: ஒருவர் கைது