×

இளம் பெண்ணை பலாத்காரம் செய்த விவகாரம்: தலைமறைவாக இருந்த கேரள மீனவர் கைது

நித்திரவிளை, டிச.17: கொல்லங்கோடு அருகே ஒரு கிராமத்தை சார்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணும், நித்திரவிளை அருகே ஒரு கிராமத்தில் உள்ள 20 வயது மதிக்கத்தக்க வாலிபரும் காதலர்கள். இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் பொழியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பருத்தியூரில், ஆறு கடலில் கலக்கும் பகுதியில் பொழுதை கழிக்க சென்றனர். துணைக்கு பக்கத்து ஊரை சேர்ந்த நண்பனையும் அழைத்து சென்றனர். இரவு வேளை ஆன போது, அந்த பகுதியில் உள்ள ஏவிஎம் கால்வாய் கரையில் இருட்டான பகுதியில் காதலன் மது அருந்தி விட்டு காதலியுடன் எல்லை மீறி நடந்ததாக தெரிகிறது. காதலனின் நண்பன் சற்று தொலைவில் அமர்ந்திருந்தார்.

இந்நிலையில் அங்கு வந்த கும்பல் காதலனையும் அவரது நண்பரையும் ஆடையை கழட்ட வைத்து, தாக்கியுள்ளனர். தொடர்ந்து காதலியை மிரட்டி ஒருவர் பின் ஒருவராக இரண்டு பேர் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து இளம் பெண், குடும்பத்தினருடன் சென்று பொழியூர் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். பின் புகார் சம்பந்தமாக எடுத்த நடவடிக்கை குறித்து காவல் நிலையத்தில் கேட்ட போது, பலாத்கார வீடியோவை போனிலிருந்து நாங்கள் அழித்து விட்டோம் என்று கூறியுள்ளனர். இதை இளம் பெண்ணின் குடும்பத்தினர் நம்பியிருந்தனர். அதேவேளையில் பலாத்காரம் செய்து விட்டு வீடியோ எடுத்தவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று விட்டனர். கரைக்கு வந்தவுடன் வீடியோவை பரவ விட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தினர் பொழியூர் போலீசாரிடம் இது குறித்து கூறியிருந்தனர்.

இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட இளம் பெண் பொழியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பருத்தியூர் பகுதியை சேர்ந்த ஐபின் மற்றும் சின்னத்துறையை சேர்ந்த காதலன் ஷரத் ப்ரியன் என்ற மாணவனையும் கைது செய்தனர். ஷாஜன் என்ற மீனவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் குற்றவாளியான ஷாஜன்(29) என்பவரை கோழிக்கோடு பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

The post இளம் பெண்ணை பலாத்காரம் செய்த விவகாரம்: தலைமறைவாக இருந்த கேரள மீனவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kerala ,Nithravilai ,Kollangode ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...