×

இருச்சக்கர வாகன விபத்தில் வாலிபர் பலி

சாயல்குடி,டிச.17: கடலாடியில் இருச்சக்கர வாகன விபத்தில் வாலிபர் பரிதாபமாக பலியானர். தூத்துக்குடி சத்யா நகரை சேர்ந்தவர் அமர்நாத்(25). இவருக்கு காயத்திரி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கடலாடியிலுள்ள உறவினர் வீட்டு விழாவிற்காக வந்துள்ளார். நிகழ்ச்சி முடிந்து மாலையில் சாயல்குடி சென்றுள்ளார். பேச்சியம்மன் கோயில் அருகே இருச்சக்கர வாகனத்தில் சென்றபோது நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை பார்த்த அப்பகுதியினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அமர்நாத்தை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மனைவி காயத்திரி கொடுத்த புகாரின் பேரில், கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post இருச்சக்கர வாகன விபத்தில் வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Chayalgudi ,Kuddaladi ,Amarnath ,Tuticorin ,Satya ,Nagar ,Gayatri ,
× RELATED பலாப்பழ சின்னத்திற்கு வாக்களித்து...