×

சேலம் இளைஞர் அணி மாநாடு மக்களவை தேர்தலில் எழுச்சியை கொண்டுவரும்: அமைச்சர் மெய்யநாதன் உறுதி

சென்னை: திமுக இளைஞரணி இரண்டாவது மாநாடு மக்களவை தேர்தலில் பெரும் எழுச்சியை கொண்டு வரும் என்று அமைச்சர் மெய்யநாதன் கூறினார். சேலம் மாவட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் மாபெறும் மாநாடு நடைபெற உள்ளது. சேலம் மாநாட்டிற்காக பாடலாசிரியர் கவிஞர் நாகூர் பாரி எழுதி, ஆசிப் இறையன்பன் இசையில், இறையன்பன் குத்தூஸ் பாடியுள்ள ‘அழைக்கிறார் உதயநிதி’ என்ற பாடல் உருவாகி உள்ளது. மயிலாடுதுறை மாவட்ட சிறுபான்மையினர் அணி துணைச் அமைப்பாளர் அகமதுஷா வலியுல்லா இதை வெளியிடுகிறார். இந்த பாடலை சென்னை பசுமைவழிச்சாலை பகுதியில் உள்ள இல்லத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று வெளியிட்டார்.

அப்போது, பேச்சாளர் ஈரோடு இறைவன், தலைமைக் கழகப் பேச்சாளர் பொன்னேரி சிவா, கலை இலக்கிய பேரவை தென்மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சண்முகநாதன் ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து அமைச்சர் சி.வி.மெய்யநாதன் கூறுகையில், ‘‘மாநில அளவிலான இரண்டாவது திமுக இளைஞரணி மாநாடு சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு மக்களவை தேர்தலில் மிகப்பெரிய எழுச்சியை கொண்டு வரும்’’ என்றார்.

The post சேலம் இளைஞர் அணி மாநாடு மக்களவை தேர்தலில் எழுச்சியை கொண்டுவரும்: அமைச்சர் மெய்யநாதன் உறுதி appeared first on Dinakaran.

Tags : Salem Youth League Conference ,Lok Sabha ,Minister ,Meiyanathan ,Chennai ,DMK youth conference ,Salem youth team ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப்...