×

சிறப்பு வழிபாட்டில் பங்கேற்க இஸ்ரேலியர்கள் கொடைக்கானலுக்கு வருகை: துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு


கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் காபாத் எனும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். 25ம் தேதி தொடங்கி 7 நாட்கள் நடைபெறும் இதில் பங்கேற்க இஸ்ரேல் நாட்டை சேர்ந்த யூத சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலுக்கு வருவார்கள். இந்தநிலையில் வருகிற 25ம் தேதி நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொள்ள இஸ்ரேலிய நாட்டு யூதர்கள் கொடைக்கானலுக்கு வர தொடங்கி உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன் இங்கு தங்கியுள்ள இஸ்ரேல் நாட்டினரை தாக்க, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டது தெரியவந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வட்டக்கானல் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post சிறப்பு வழிபாட்டில் பங்கேற்க இஸ்ரேலியர்கள் கொடைக்கானலுக்கு வருகை: துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Vattakanal ,Dindigul district ,Kabad ,Dinakaran ,
× RELATED இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலில்...