×

யானை தாக்கியதில் ஒன்றிய தலைவியின் தந்தை பலி


கூடலூர்: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகள் உள்ளன. அங்கிருந்து நேற்று காலை வளர்ப்பு யானை வில்சனை அதன் பாகன், குடியிருப்பு பகுதிக்கு அழைத்து வந்தார். எதிரே நடந்து வந்த, யானைப்பாடி கேம் பகுதியை சேர்ந்த மாதனை (70) திடீரென யானை தும்பிக்கையால் தாக்கி தூக்கி வீசியது. பலத்த காயமடைந்த அவரை வனத்துறையினர் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். பலியான மாதன், கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவி கீர்த்தனாவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

The post யானை தாக்கியதில் ஒன்றிய தலைவியின் தந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Union ,Cuddalore ,Nilgiris District ,Mudumalai Tiger Reserve ,Theppakadu Elephant Camp ,Dinakaran ,
× RELATED சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட நகரின்...