×

சென்னையில் இருந்து திருச்சி சென்ற ஆம்னி பஸ்- லாரி மோதல்: 2 டிரைவர் பலி; 15 பேர் காயம்


உளுந்தூர்பேட்டை: சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருச்சி சென்று கொண்டிருந்தது. பஸ்சை கரூர் மாவட்டம் பரமத்திவேலூர், கொப்பனம்பாளையத்தை சேர்ந்த மணி (49) ஓட்டிச் சென்றார். நேற்று அதிகாலை கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த பாலி தமிழ்நாடு சிறப்பு காவல் படை முகாம் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை நடுவில் இருந்த தடுப்புகளை உடைத்து எதிரே திருச்சியில் இருந்து சென்னைக்கு இரும்பு லோடு ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதில், பஸ் டிரைவர் மணி, கன்டெய்னர் லாரி டிரைவர் பீகார் மாநிலம் பொகரேராவை சேர்ந்த சந்தோஷ்குமார்(36) ஆகியோர் உயிரிழந்தனர். பஸ்சில் இருந்த அறந்தாங்கியை சேர்ந்த தினேஷ்கார்த்திக்(31), உமா மகேஸ்வரி(24), சென்னை ரமேஷ் (41), கொடைக்கானல் விமல் (39), கீழ்ப்பாக்கம் நிர்மல் பிரசாந்த் (19) உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post சென்னையில் இருந்து திருச்சி சென்ற ஆம்னி பஸ்- லாரி மோதல்: 2 டிரைவர் பலி; 15 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Trichy ,omni ,collision ,Ulundurpet ,Bussai Karur district… ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து