×

தா.பழூரில் மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணி

தா.பழூர்,டிச.16: தா.பழூரில் மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணி நடந்தது. அரியலூர் மாவட்டம் தா.பழூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம், அரியலூர் கோட்டம் சார்பில் மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணி உதவி செயற்பொறியாளர் கிராமியம் ஜெயங்கொண்டம் பாக்கியராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் உதவி மின் பொறியாளர் தா.பழூர் இளையராஜா முன்னிலையில் நடைபெற்ற பேரணியில் ஆக்க முகவர், மின்பாதை ஆய்வாளர், கேங் மேன், வணிக ஆய்வாளர்கள், வணிக உதவியாளர்கள் பேரணியாக சென்றனர்.

இந்த பேரணியானது சுத்தமல்லி பிரிவு சாலையில் இருந்து துவங்கி முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. இதில் மின் சேமிப்பு மற்றும் மின் பாதுகாப்பு குறிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
இதில் மின் சேமிப்புக்கு மின் விளக்குகள் பயன்படுத்துவது, குளிர்சாதன பெட்டிகள் பயன்படுத்துவது, குளிருட்டிகள் பயன்படுத்துவது, தண்ணீர் சூடேற்றுவது, கணினி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் பயன்படுத்துவது, சலவை இயந்திரம் பயன்படுத்துவது, வீட்டில் மின்சாரத்தை வீணாக்குவதை சிக்கனம் செய்வது குறித்தும், மின் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

The post தா.பழூரில் மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Power Saving Week Awareness Rally ,Tha.Papur. ,Tha.Bahur ,power saving week ,Tha.Bahur. ,Tamil Nadu ,Ariyalur district ,Tha.Pahur ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 3 மாட்டுவண்டிகள் பறிமுதல்