×

மண்மங்கலம் கிராமத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

கரூர், டிச. 16: மண்மங்கலம் கிராமத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. கரூர் மாவட்டம் மண்மங்கலம் கிராமத்தில் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆத்தூர் பாரத் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனத்தின் சார்பில் தீ தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்டம் ஆத்தூர் பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தீ தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சியில், பெட்ரோல் வாகனம் சாலையில் தீப்பற்றி எரியும் போது, அதனை நுரை கலந்த நீரைக் கொண்டு வாகனத்தின் தீயை அணைக்கும் ஒத்திகை நிகழ்வினை செய்து காண்பித்தனர்.

பெட்ரோலிய திரவம் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய திரவ பொருள் எனவே, நெருப்புக்கு ஆக்ஸிஜன் கிடைக்க விடாமல் இருப்பதற்காக நுரை கலந்த நீரை கொண்டு தீயை அணைப்பதற்கு உபயோகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வுக்கு காற்று தடை செய்யும் நிகழ்வாகும். இந்த ஒத்திகை நிகழ்வினை ஆத்தூர் பாரத் பெட்ரோலிய நிறுவனம், டிஎன்பிஎல நிறுவனம் மற்றும் மாவட்ட தீயணைப்பு மீட்பு துறையினர்கள் செய்து காண்பித்தனர். இந்த நிகழ்வில், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலர் வடிவேல், பாரத் பெட்ரோலிய நிறுவன மேலாளர் குணாஜிராவ், டிப்போ மேலாளர் போனு லட்சுமண ராய், தாசில்தார் குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மண்மங்கலம் கிராமத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Manmangalam village ,Karur ,Karur District ,Manmangalam ,Village District ,Dinakaran ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...