×

கமுதி பேரூராட்சியில் புதிதாக 25 சோலார் விளக்குகள்

கமுதி, டிச. 16: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 6-வது பகுதியான முத்துமாரியம்மன் நகர் பகுதியில் தெரு விளக்குகள் சரிவர இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். மேலும் இரவு நேரங்களில் இருளான பகுதிகளில் விஷ பூச்சிகளுக்கு பயந்து வெளியே வராமல் இருந்து வந்தனர். இந்நிலையில் அப்பகுதி வார்டு கவுன்சிலர் போஸ் செல்வா தனது சொந்த செலவில் 25 சோலார் விளக்குகள் அமைத்து கொடுத்துள்ளார்.

இதே போல் 9-வது வார்டு பகுதியில் கவுன்சிலர் பொன்னுச்சாமி சோலார் விளக்குகள் அமைத்துக் கொடுத்துள்ளார். இதனை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் அப்துல் வஹாப் சகாராணி தலைமையில், துணைத் தலைவர் அந்தோணி சவேரியார் அடிமை மற்றும் செயல் அலுவலர் இளவரசி ஆகியோர் முன்னிலையில் வார்டு கவுன்சிலர்கள் பொன்னுசாமி மற்றும் போஸ்செல்வா உடனிருந்து இதனை துவக்கி வைத்தனர்.

The post கமுதி பேரூராட்சியில் புதிதாக 25 சோலார் விளக்குகள் appeared first on Dinakaran.

Tags : Kamudi ,Ramanathapuram district ,Muthumariyamman ,
× RELATED கமுதி பேருந்து நிலையத்தில் ஆட்டோ,...