×

நிலக்கோட்டை அருகே டூவீலர் மீது பஸ் மோதி தம்பி பலி: அண்ணன் படுகாயம்

 

நிலக்கோட்டை, டிச. 16: நிலக்கோட்டை அருகேயுள்ள செங்கோட்டையை சேர்ந்தவர் பரசுராமன். கட்டுமான பொருட்கள் விற்பனை காண்ட்ராக்டர். இவருக்கு அபிஷ்குமார் (22), மணிகண்டன் (20) என இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளார். தந்தைக்கு உதவியாக 2 மகன்களும் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அபிஷ் குமார், மணிகண்டனும் வெளியே சென்று விட்டு டூவீலரில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.

செம்பட்டி சாலையில் அரசு மருத்துவமனையை அடுத்த ஒரு பெட்ரோல் பங்க் அருகே வந்த போது எதிரே வந்த அரசு பஸ், இவர்களது டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலே மணிகண்டன் உயிரிழந்தார். அபிஷ் குமார் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தந்தை பரசுராமன் அளித்த புகாரில் நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நிலக்கோட்டை அருகே டூவீலர் மீது பஸ் மோதி தம்பி பலி: அண்ணன் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Nilakottai ,Annan Padukayam ,Parasuraman ,Sengottai ,Abhish Kumar ,
× RELATED காவல் நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த குற்ற வழக்கு வாகனங்கள்