- வடசேரி பேருந்து நிலையம்
- நாகர்கோவில்
- தங்கவேல்
- பைனப்பள்ளி அஜயபுத்தூர்
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- வடசேரி பேருந்து நிலையம்
- தின மலர்
நாகர்கோவில், டிச.16: கிருஷ்ணகிரி மாவட்டம் பைனாபள்ளி அழகியபுதூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (23). இவர் நாகர்கோவிலில் உள்ள பிரபல பேக்கரி ஒன்றில், மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். வடசேரி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி உள்ளார். சம்பவத்தன்று இவர் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து மீனாட்சிபுரம் பஸ் நிலையம் செல்வதற்காக மினி பஸ்சில் ஏறினார். பின்னர் அந்த மினி பஸ்சில் இருந்து இறங்கி மற்றொரு மினி பஸ்சில் ஏறி செல்ல முயன்றார்.
இதனால் அவர் ஏற்கனவே இருந்த மினி பஸ் பணியாளர்கள் சேர்ந்து தங்கவேலை தடுத்து நிறுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட மற்றொரு மினி பஸ் டிரைவர், கண்டக்டரையும் மிரட்டினர். இந்த சம்பவம் குறித்து தங்கவேல் அளித்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் விசாரணை நடத்தி, அவரை தாக்கி மிரட்டிய மினி பஸ் பணியாளர் யோகேஷ், இருளப்பபுரத்தை சேர்ந்த ராஜேந்திர பிரசாத், ஜோஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
The post மினி பஸ்கள் பிரச்னையில் வடசேரி பஸ் நிலையத்தில் பயணி மீது தாக்குதல் appeared first on Dinakaran.