×

மானூர் அருகே கல்லூரி மாணவரை மிரட்டிய இருவர் கைது

மானூர், டிச.16: மானூர் அருகே கல்லூரி மாணவருக்கு கொலைமிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர். மானூர் அருகே கட்டாரங்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் இசக்கிராஜா(20). இவர் நெல்லையில் உள்ள கல்லூரி ஒன்றில் பிஏ தமிழ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் கட்டாரங்குளத்திலுள்ள உச்சியம்மன் கோயிலில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த சாந்ததுரை மகன் ஜெயபாஸ்கர் (26), ஆபிரகாம் மகன் அந்தோணி (25) ஆகிய இருவரும் அவதூறாக பேசியதோடு அரிவாளால் தாக்க முயன்றனர்.

இதுதொடர்பாக இசக்கி ராஜா, மானூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தாழையூத்து டிஎஸ்பி ஆனந்தராஜ் வழக்குப்பதிவு செய்து ஜெயபாஸ்கர், அந்தோணி ஆகிய இருவரையும் கைது செய்தார். அதேநேரத்தில் கூலி தொழிலாளி ஜெயபாஸ்கர், தன்னை இசக்கிராஜா தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மானூர் அருகே கல்லூரி மாணவரை மிரட்டிய இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Manoor ,Katarangulam ,Manur ,Dinakaran ,
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது