×

களக்காடு அருகே சிறுவன் மாயம்

களக்காடு, டிச.16: களக்காடு அருகே மாவடி மேலத்தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் ஐயப்பன் (41). இவர் டிரைவராக உள்ளார். இவரது மகன் மோகன் சபரி (15) திருக்குறுங்குடியில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன் தினம் மாலை மோகன் சபரி ஸ்கேல் வாங்க கடைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் பதறிய பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுவன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து திருக்குறுங்குடி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் ஏர்வாடி இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுவனை தேடிவருகின்றனர்.

The post களக்காடு அருகே சிறுவன் மாயம் appeared first on Dinakaran.

Tags : Kalakadu ,Subbiah ,Ayyappan ,Mavadi ,Meleteru ,
× RELATED களக்காடு புலிகள் காப்பகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணிகள்