×

ராசிபுரத்தில் தெருமுனை பிரசாரம்

ராசிபுரம், டிச.16: திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், தலைமை பேச்சாளர்கள் 15 பேர் கொண்ட குழுவினர், பிரசார மேடை வடிவமைப்புடன் கூடிய வாகனம் மூலம் திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், ஆட்டையாம்பட்டி மற்றும் வெண்ணந்தூர் பகுதிகளில் நடைபெற்ற தெருமுனை கூட்டங்களில் சனாதனத்தையும், திராவிட ஆட்சியின் சாதனைகளையும் விளக்கிப் பேசினர். நிகழ்ச்சிக்கு ராசிபுரம் நகர செயலாளர் சேகுவேரா தலைமை வகித்தார். நகர அமைப்பாளர் சுமதி மதிவதனி வரவேற்றார்.

திமுக முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மாநில பொருளாளர் துரைசாமி, மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பேசினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மணிவேல், வக்கீல் கைலாஷ், அரசன், சரவணன், முத்துப்பாண்டி, அன்பரசன், பெருமாள், மணிமாறன், மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post ராசிபுரத்தில் தெருமுனை பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Dravidian Liberation Association ,Dinakaran ,
× RELATED நாமக்கலில் சிறுமிகளுக்கு பாலியல்...