×

ஊருக்குள் புகுந்த மான் மர்மச்சாவு

மோகனூர், டிச.16: வளையப்பட்டி அருகே ஊருக்குள் புகுந்த மான் மர்மமான முறையில் உயிரிழந்தது. உடலை வனத்துறையினர் மீட்டு விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டியில் இருந்து காட்டுப்புத்தூர் செல்லும் வழியில் ஆண்டாபுரம் பகுதியில் நேற்று மான் ஒன்று இறந்து கிடந்தது.

அதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து திடுக்கிட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில், நாமக்கல் வனச்சரகர் பெருமாள், வனவர் சந்திரசேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மானை பார்வையிட்டனர். பின்னர், அதனை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் அறிக்கை வந்த பின்னரே மான் சாவுக்கான காரணம் குறித்து தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post ஊருக்குள் புகுந்த மான் மர்மச்சாவு appeared first on Dinakaran.

Tags : Mohanur ,Rangapatti ,
× RELATED தண்ணீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு