×

மாயமான வாலிபர் சடலம் கிணற்றில் மீட்பு

போச்சம்பள்ளி, டிச.16: வேலம்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ்(36). இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவரது மனைவி பரிமளா(32), போச்சம்பள்ளி தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, வாடகைக்கு சென்ற சுரேஷ், பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் வேலம்பட்டியில் உள்ள ஓட்டல் முன்பு, கேட்பாரற்று அவரது கார் மட்டும் நிறுத்தப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், சுரேசை தேடிய போது, அருகில் உள்ள விவசாய கிணற்றில் சுரேஷின் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நாகரசம்பட்டி போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுரேஷ் தற்கொலை செய்து கொண்டாரா?அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாயமான வாலிபர் சடலம் கிணற்றில் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Bochambally ,Suresh ,Velampatti ,Parimala ,
× RELATED போச்சம்பள்ளி ஜி.ஹெச் அருகே விவசாய...