×

போலி பாஸ்போர்ட்டில் திருச்சிக்கு வந்த பெண் கைது

திருச்சி: போலி பாஸ்போர்ட்டில் சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த தஞ்சை பெண் கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே புன்னியநல்லூரை சேர்ந்தவர் மாலதி (56). இவர், நேற்று முன்தினம் சார்ஜாவில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு வந்தார். அப்போது அவரது பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இதில், அவரது ஆதார் கார்டில் பிறந்த தேதி மாற்றம் செய்யப்பட்டிருந்ததும், மாலதி 2 ஆதார் கார்டு வைத்திருந்ததும், அதில் பிறந்த தேதியை மாற்றி பாஸ்போர்ட் பெற்றதாகவும் தெரிய வந்தது. இதையடுத்து மாலதி ஏர்போர்ட் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இதுகுறித்து நேற்று வழக்குப்பதிவு செய்த போலீசார், மாலதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போலி பாஸ்போர்ட்டில் திருச்சிக்கு வந்த பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Tanjore ,Sharjah ,Thanjavur district ,Papanasam ,Dinakaran ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்