×

ம.பி.யை விட்டு செல்ல மாட்டேன் பெண்களிடம் கண்ணீர்விட்ட முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங்

போபால்: மத்தியப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜ 163 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல்வராக இருக்கும் சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக நீடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய முதல்வராக மோகன்யாதவை பாஜ தேர்ந்தெடுத்தது. இதனை தொடர்ந்து கடந்த 11ம் தேதி இவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இவர் முதல்வராக இருந்தபோது பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார்.

இந்நிலையில் விதிஷாவில் உள்ள ஹனுமன் கோயிலுக்கு முன்னாள் முதல்வர் சவுகான் சென்றார். அப்போது அவரை அங்கிருந்த பெண்கள் சூழ்ந்து கொண்டனர். பையா, மாமா என்று அழைத்து அவரை அழைத்து நெகிழ்ந்தனர். அவர் மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்று அங்கு திரண்ட பெண்கள் வலியுறுத்தினார்கள். அப்போது சிவராஜ் சிங்கின் கண்கள் கலங்கின. அவர்களிடம் நான் மத்தியப்பிரதேசத்தை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என்று சிவராஜ் சிங் சவுகான் உறுதியளித்தார்.

The post ம.பி.யை விட்டு செல்ல மாட்டேன் பெண்களிடம் கண்ணீர்விட்ட முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் appeared first on Dinakaran.

Tags : Former ,Chief Minister ,Shivraj Singh ,Bhopal ,BJP ,Madhya Pradesh assembly elections ,
× RELATED இவிஎம்மில் என் போட்டோ சிறிதாக உள்ளது:...