×

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு : பாஜக எம்.எல்.ஏ. ராம்துலார் கோந்துக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு!!

லக்னோ : 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. ராம்துலார் கோந்துக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டவர் ராம்துலார் கோண்ட். இவர் கடந்த 2014-ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், பாலியல் வன்கொடுமை நடைபெறும்போது அவர் எம்.எல்.ஏ.-வாக இல்லை.

தேர்தலில் வெற்றிபெற்று அவர் எம்.எல்.ஏ ஆனதால், இந்த வழக்கு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை முடிவில் , ராம்துலார் கோண்ட் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. இத்தீர்ப்பை தொடர்ந்து, ஜாமினில் வெளியே இருந்த அவர், நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், குற்றவாளிக்கு தண்டனை இன்று வழங்கப்பட்டது. அதன்படி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக எம்.எல்.ஏ. ராம்துலார் கோந்துக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை பெற்றதால், மக்கள் பிரதிநிதிகள் சட்டப்படி எம்.எல்.ஏ. பதவியை கோந்த் இழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு : பாஜக எம்.எல்.ஏ. ராம்துலார் கோந்துக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு!! appeared first on Dinakaran.

Tags : Bajaka M. L. A. RAMDULAR KONTH ,Lucknow ,BJP ,L. A. Ramtular ,Bajaka M. L. A. RAMDULAR ,
× RELATED அமேதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மா வேட்புமனு..!!