×

மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கைதான ஆசிரியர் சஸ்பெண்ட்

வானூர்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திருவக்கரையில் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வரும் மகேஸ்வரன் (38) என்பவர் அங்கு படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை தனியார் லாட்ஜூக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதனால் மனமுடைந்த அந்த மாணவி நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் தற்கொலைக்கு முயன்றார். அவரை அவரது தாய் காப்பாற்றினார்.

இதற்கிடையே, அந்த ஆசிரியர் மீது நேற்று முன்தினம் மட்டும் அடுத்தடுத்து 7 மாணவிகள் தங்களது பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஆசிரியர் மகேஸ்வரனை சரமாரியாக தாக்கி வானூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஆசிரியர் மகேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உத்தரவிட்டுள்ளார்.

The post மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கைதான ஆசிரியர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Vanur ,Maheswaran ,Tiruvakarai ,Villupuram ,
× RELATED வரம் தரும் அம்பிகையர்