சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கை: ரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலுக்குள்ளேயே அய்யப்ப பக்தர்கள்மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பக்தர்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக விளங்குவது சட்டம் ஒழுங்குதான் என்பதைக் கருத்தில் கொண்டு, திருக்கோயில்களில் இதுபோன்ற தாக்குதல் இனி வருங்காலங்களில் வராமல் பார்த்துக் கொள்ளவும் பக்தர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தவும் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்திடுமாறும் முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.
The post பக்தர்களுக்கு பாதுகாப்பு: ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.